த்3ரோணம் ச1 பீ4ஷ்மம் ச1 ஜயத்3ரத2ம் ச11ர்ணம் த1தா2ன்யானபி1 யோத4வீரான் |

மயா ஹதா1ந்ஸ்த்1வம் ஜஹி மா வ்யதி2ஷ்டா2 யுத்4யஸ்வ ஜேதா1ஸி ரணே ஸப1த்1னான் ||34||

துரோணம்--—துரோணாச்சாரியர்; ச—-மற்றும்; பீஷ்மம்—--பீஷ்மர்; ச—--மற்றும்; ஜயத்ரதம்----ஜெயத்ரதன்; ச--—மற்றும்; கர்ணம்—--கர்ணன்; ததா—--மேலும்; அன்யான்—--மற்றவர்கள்; அபி--—மேலும்; யோத-வீரான்----துணிச்சலான வீரர்கள்; மயா—--என்னால்; ஹதான்—--ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்; த்வம்--—நீ; ஜஹி--—கொல்; மா--—இல்லாமல் வ்யதிஷ்டாஹா—--குழப்பம்; யுத்யஸ்வ--—போரிடு; ஜேதா-அஸி---நீ வெல்வாய்; ரணே—--போரில்; ஸபத்னான்----எதிரிகளை

అనువాదం

BG 11.34: துரோணாச்சாரியர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் பிற பெரும் போர்வீரர்கள் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டுவிட்டனர். அதனால் கலங்காமல் அவர்களைக் கொல்வாயாக, போரிடு, உன் எதிரிகளை நீ வெல்வாய்.

వ్యాఖ్యానం

கௌரவர்களின் தரப்பில் நடந்த போரில் பல சேனை வீரர்கள் தோற்கடிக்கப்படவில்லை. ஜெயத்ரதன் இறந்தவுடன் அவன் தலை தரையில் விழுந்தவுடன், அவனைக் கொன்ற எதிரியின் தலையும் துண்டு துண்டாக உடைந்து தரையில் விழும் என்று ஒரு வரம் பெற்றான். கர்ணனிடம் இந்திரன் கொடுத்த 'சக்தி' என்ற சிறப்பு ஆயுதம் இருந்தது, அதைப் பயன்படுத்தி யாரையும் கொல்ல முடியும், ஆனால் அதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், எனவே அர்ஜுனனைக் கொல்ல கர்ணன் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தான். துரோணாச்சாரியர் அனைத்து ஆயுதங்களைப் பற்றிய அறிவையும், கடவுளின் அவதாரமான பரசுராமரிடமிருந்து பெற்று அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் அறிந்திருந்தார். அவர் இறக்கும் இடம் மற்றும் நேரத்தை தேர்ந்தெடுக்கும் வரத்தை பெற்றிருந்தார். ஆனால் இன்னும், கடவுள் ஒருவரை போரில் கொல்ல விரும்பினால், அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. ஒரு முதுமொழி இருக்கிறது:

விந்த்4யா ந ஈந்த4ன பா1யியே, ஸாக3ர ஜுடா4யி ந நீர

1ராயி உப3ஸ் கு1பேர் க4ர, ஜ்யோன் விப1க்ஷ ரகு4பீ3

‘பகவான் ராமர் உங்களுக்கு எதிராக இருக்க முடிவு செய்தால், நீங்கள் விந்தியாச்சல் காட்டில் வாழலாம், ஆனால் நெருப்பை மூட்டுவதற்கு உங்களுக்கு விறகு கிடைக்காது. நீங்கள் கடலின் ஓரத்தில் இருக்கலாம், ஆனால் உங்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும்; நீங்கள் செல்வத்தின் கடவுளான குபேரின் வீட்டில் வசிக்கலாம், ஆனால் உங்களுக்கு சாப்பிட போதுமானதாக இருக்காது.‘ எனவே, கடவுள் நினைத்தால், பாதுகாப்பதற்கான மிகப்பெரிய ஏற்பாடுகள் கூட ஒரு நபரின் மரணத்தை தடுக்க முடியாது. அவ்வாறே ஸ்ரீ கிருஷ்ணர் அவர் ஏற்கனவே முடிவைத் தீர்மானித்து விட்டதாகக் கூறுகிறார். ஆனால், தன் விருப்பத்தை நிறைவேற்றி, போரில் வென்று புகழ் பெறுவதற்கு அர்ஜுனன் ஊடகமாக இருக்க வேண்டும் என்றும் மற்றும் வெற்றியின் மகிமையை தனது பக்திக்கு வெகுமதியாக அர்ஜுனன் பெற வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விரும்புகிறார். பக்தர்கள் கடவுளை மகிமைப்படுத்த விரும்புவதைப் போலவே, கடவுளின் இயல்பு அவரது பக்தர்களை மகிமைப்படுத்துகிறது. எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் போரில் வெற்றிக்கான பெருமையை அவர் தனக்கு வருவதை விரும்பவில்லை; போருக்குப் பிறகு, ‘அர்ஜுனன் வீரத்துடன், பாண்டவர்களின் வெற்றியைப் பெற்றுத் தந்தான்’ என்று மக்கள் கூற வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆன்மீக வாழ்க்கையிலும், ஆர்வமுள்ளவர்கள் கோபம், பேராசை, பொறாமை, காமம், பெருமை மற்றும் பிற எதிர்மறை உணர்ச்சிகளின் குறைபாடுகளை அகற்றுவதில் தாங்களே இயலாமையாகக் காணும்பொழுது மனம் தளர்ந்து விடுகிறார்கள். அப்பொழுது அவர்களின் குரு அவர்களை ஊக்கப்படுத்துகிறார், ‘மனச்சோர்வடைய வேண்டாம். போரிடுங்கள், உங்கள் மனதின் எதிரிகளை வெல்வீர்கள், ஏனென்றால் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். உங்கள் முயற்சி கருவியாக இருக்கும், அதே நேரத்தில் கடவுள் உங்கள் வெற்றியை அவருடைய கிருபையால் வடிவமைப்பார்.' என்று கூறி ஊக்கப்படுத்துகிறார்

இறைவனின் அழைப்பைக் கேட்ட அர்ஜுனனின் எதிர்வினை என்ன? இது அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
11. விஸ்வரூப தரிசன யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency